உடுமலையில் பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் அறிமுக கூட்டம் - முன்னாள் அமைச்சர் சண்முகவேலு பங்கேற்பு

பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்தால் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் என பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகத்தில் பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் அறிமுக கூட்டம் முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணை பொதுச்செயலாளருமான சண்முகவேலு தலைமயில் நடைபெற்றது.



கூட்டத்தில் பொள்ளாச்சி பாராளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து வீடு வீடாக மத்திய அரசின் திட்டங்களை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்ப எதிர்பார்க்கின்றனர், மூன்றாவது முறையாக பாரத பிரதமர் மோடி பிரதமர் ஆவது உறுதி என முன்னாள் அமைச்சரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணை பொதுச் செயலாளருமான சண்முகவேலு பேசினார்.



பின்னர் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் பேசும்போது, தமிழகத்தில் திராவிட கட்சிகளை வெளியேற்ற தற்பொழுது நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. மக்கள் திராவிட கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்துவிட்டது. திமுக, அதிமுக கட்சியினர் எம்பி ஆனால் பாராளுமன்றத்திற்கு டீ குடிப்பதற்கு மட்டும் தான் செல்வார்கள்.

எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்த மாட்டார்கள். எனவே பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்தால் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியை மாதிரியான திட்டமாக கொண்டு வர அரும் பாடுபடுவேன் மற்றும் இந்தப் பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலை நல்லாறு திட்டம் நிறை வேற்றுதல் உட்பட பல்வேறு முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்படும் என பேசினார்.

திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், உடுமலை நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நகர செயலாளர் பாஸ்கரன், மற்றும் உடுமலை மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி பாஜக நிர்வாகிகள் கலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...