கோவையில் வாக்கு கேட்டு வந்த பாஜக தொண்டர்கள் மீது கல் எறிந்து காயப்படுத்திய வாலிபர் கைது..!

32 வது வட்டத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜகவினரிடம் வாக்குவாதம் செய்து கற்களை தூக்கி வீசிய நவ்சாத் என்ற நபர் மீது 294 பி, 324, 506/2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.


கோவை: கோவையில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜகவினர் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து, நேற்று பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் 32 வது வட்டத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் வசிக்கின்ற நவ்சாத் என்ற நபர் பாஜகவினர் வாக்கு சேகரிக்க கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து வாக்குவாதம் செய்த அவர், கற்களை தூக்கி வீசியுள்ளார். இதில், பிரச்சாரத்திற்கு சென்ற 2 ஆண்களும், 3 பெண்களும் காயமடைந்தனர்.



அதில், பிரபு என்ற தொண்டர் காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காயமடைந்த மகளிர் அரசு மருத்துவமனையில் காயத்திற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

பாதிக்கப்பட்டவர்களை, பாஜக மாவட்ட தலைவர் J. ரமேஷ் குமார் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.



மேலும், சம்பவம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுண்டம்பாளையம் காவல்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

தொடர்ந்து சம்பவத்தை விசாரித்த போலீசார், நவ்சாத் மீது 294 பி, 324, 506/2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

சிஏஏ உள்ளிட்ட சட்டங்களுக்கு இஸ்லாமியர்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இஸ்லாமிய வாலிபர் பாஜவினரை ஓட்டு கேட்க விடாமல் கல்லால் தாக்கி விரட்டிய சம்பவம் கோவை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...