90 ஹெக்டர் சீமை கருவேல மரங்களும், 50 ஹெக்டேர் உன்னி செடிகளும் அகற்றப்பட உள்ளது. தேவையற்ற களை செடிகளும் அகற்றப்படுகின்றன. இதனால், இருப்புப்பாதை அருகில் வனவிலங்குகள் வருவது தெளிவாக தெரியும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்ட வன அலுவலரின் உத்தரவின் பேரில், மதுக்கரை வனசரகம் நவக்கரை பிரிவு, சோளக்கரை சுற்றுப்புற பகுதிகள், ரயில் இருப்பு பாதை அருகில் உள்ள களைச் செடிகளான சீமை கருவேல மரம் மற்றும் உன்னிச் செடிகள் இன்று (மார்ச்.30) அகற்றப்பட்டு வருகிறது.
அதன்படி 90 ஹெக்டர் சீமை கருவேல மரங்களும், 50 ஹெக்டேர் உன்னி செடிகளும் அகற்றப்பட உள்ளது. அதுமட்டுமின்றி தேவையற்ற களை செடிகளும் அகற்றப்படுகின்றன. இதன் மூலம் வனவிலங்குகள் ரயில்வே இருப்புப்பாதை அருகில் வந்தால் இருப்புப் பாதை காவலர்களுக்கு எளிதாக தெரியும் எனவும், யானைகள் மற்றும் மற்ற வனவிலங்குகளின் நகர்வு தொடர்ச்சியாக கண்காணிக்க எளிதாக இருக்கும் எனவும், வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி 90 ஹெக்டர் சீமை கருவேல மரங்களும், 50 ஹெக்டேர் உன்னி செடிகளும் அகற்றப்பட உள்ளது. அதுமட்டுமின்றி தேவையற்ற களை செடிகளும் அகற்றப்படுகின்றன. இதன் மூலம் வனவிலங்குகள் ரயில்வே இருப்புப்பாதை அருகில் வந்தால் இருப்புப் பாதை காவலர்களுக்கு எளிதாக தெரியும் எனவும், யானைகள் மற்றும் மற்ற வனவிலங்குகளின் நகர்வு தொடர்ச்சியாக கண்காணிக்க எளிதாக இருக்கும் எனவும், வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.