மடத்துக்குளம் பகுதியில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்தால் அம்மாவின் திட்டங்கள் மீண்டும் தமிழகத்தில் கொண்டு வரவும், மத்திய அரசு மூலம் கிடைக்கும் திட்டங்களைய கொண்டு வரவும் பாடுபடுவேன் என்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரத்தொழுவு மெட்ராத்தி ,கணியூர், துங்காவி, ஜல்லிபட்டி, குறிச்சி கோட்டை உட்பட 40 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் இரட்டை இலை சின்னத்திற்கு பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கி தீவிர வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் தற்பொழுது அதிமுக கொண்டு வந்த தாலிக்கு தங்கம், இலவச சைக்கிள் வழங்கும் திட்டம், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளன.



இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே இரட்டை இலை சின்னத்திற்கு எனக்கு வாக்களித்தால் அம்மாவின் திட்டங்கள் மீண்டும் தமிழகத்தில் கொண்டு வரவும், மத்திய அரசு மூலம் கிடைக்கும் திட்டங்களையும் கொண்டு வர பாடுபடுவேன் என பேசினார். வாக்கு சேகரிப்பின் போது திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான சி. மகேந்திரன் , மடத்துக்குளம் பகுதி அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...