மடத்துக்குளம் பகுதியில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்தால் அம்மாவின் திட்டங்கள் மீண்டும் தமிழகத்தில் கொண்டு வரவும், மத்திய அரசு மூலம் கிடைக்கும் திட்டங்களைய கொண்டு வரவும் பாடுபடுவேன் என்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரத்தொழுவு மெட்ராத்தி ,கணியூர், துங்காவி, ஜல்லிபட்டி, குறிச்சி கோட்டை உட்பட 40 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் இரட்டை இலை சின்னத்திற்கு பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கி தீவிர வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் தற்பொழுது அதிமுக கொண்டு வந்த தாலிக்கு தங்கம், இலவச சைக்கிள் வழங்கும் திட்டம், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளன.



இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே இரட்டை இலை சின்னத்திற்கு எனக்கு வாக்களித்தால் அம்மாவின் திட்டங்கள் மீண்டும் தமிழகத்தில் கொண்டு வரவும், மத்திய அரசு மூலம் கிடைக்கும் திட்டங்களையும் கொண்டு வர பாடுபடுவேன் என பேசினார். வாக்கு சேகரிப்பின் போது திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான சி. மகேந்திரன் , மடத்துக்குளம் பகுதி அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...