கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஸ்ரீ ரேணுகாதேவி கம்மவார் நாயுடு சங்கம் ஆதரவு

இந்து மக்களின் நீண்ட நாள் கனவான அயோத்தியில் ராமர் ஆலயத்தை மோடி அமைத்துள்ளார். எனவே 3 வது முறையாகவும் மோடி பிரதமர் ஆக வேண்டும். இதற்காக அண்ணாமலைக்கு வாக்களிக்க உள்ளதாக ஸ்ரீ ரேணுகாதேவி கம்மவார் நாயுடு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.


கோவை: அயோத்தியில் ராமர் ஆலயம் அமைத்திட்ட மோடிக்கு கோவையில் உள்ள ஸ்ரீ ரேணுகாதேவி கம்மவார் நாயுடு சங்கத்தைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் குடும்பத்தினர் கோவையில் அண்ணாமலைக்கு வாக்களிக்க உள்ளதாக கோவை மாவட்ட தலைவர் வெங்கட துரைபாலன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் ஸ்ரீ ரேணுகாதேவி கம்மவார் நாயுடு சங்கத்தில் 5 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் குடும்பத்தினர் உள்ளனர்.



இந்த நிலையில் இன்று கோவை இடிகரை பகுதியில் தேசிய வாக்காளர் பேரவையுடன் இச்சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த இச்சங்கத்தினர் நாடு 11 வது இடத்தில் இருந்து 5 வது இடத்திற்கு பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளது. இந்து மக்களின் நீண்ட நாள் கனவான அயோத்தியில் ராமர் ஆலயத்தை மோடி அமைத்துள்ளார். எனவே 3 வது முறையாகவும் மோடி பிரதமர் ஆக வேண்டும். இதற்காக சங்கத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் குடும்பத்தினர் பாஜகவிற்கு வாக்களிக்க உள்ளோம். கோவையில் போட்டியிடும் அண்ணாமலை மக்களுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்துள்ளதாகவும், எனவே அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பெறச் செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...