இந்து மக்களின் நீண்ட நாள் கனவான அயோத்தியில் ராமர் ஆலயத்தை மோடி அமைத்துள்ளார். எனவே 3 வது முறையாகவும் மோடி பிரதமர் ஆக வேண்டும். இதற்காக அண்ணாமலைக்கு வாக்களிக்க உள்ளதாக ஸ்ரீ ரேணுகாதேவி கம்மவார் நாயுடு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
கோவை: அயோத்தியில் ராமர் ஆலயம் அமைத்திட்ட மோடிக்கு கோவையில் உள்ள ஸ்ரீ ரேணுகாதேவி கம்மவார் நாயுடு சங்கத்தைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் குடும்பத்தினர் கோவையில் அண்ணாமலைக்கு வாக்களிக்க உள்ளதாக கோவை மாவட்ட தலைவர் வெங்கட துரைபாலன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் ஸ்ரீ ரேணுகாதேவி கம்மவார் நாயுடு சங்கத்தில் 5 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் குடும்பத்தினர் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று கோவை இடிகரை பகுதியில் தேசிய வாக்காளர் பேரவையுடன் இச்சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த இச்சங்கத்தினர் நாடு 11 வது இடத்தில் இருந்து 5 வது இடத்திற்கு பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளது. இந்து மக்களின் நீண்ட நாள் கனவான அயோத்தியில் ராமர் ஆலயத்தை மோடி அமைத்துள்ளார். எனவே 3 வது முறையாகவும் மோடி பிரதமர் ஆக வேண்டும். இதற்காக சங்கத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் குடும்பத்தினர் பாஜகவிற்கு வாக்களிக்க உள்ளோம். கோவையில் போட்டியிடும் அண்ணாமலை மக்களுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்துள்ளதாகவும், எனவே அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பெறச் செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று கோவை இடிகரை பகுதியில் தேசிய வாக்காளர் பேரவையுடன் இச்சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த இச்சங்கத்தினர் நாடு 11 வது இடத்தில் இருந்து 5 வது இடத்திற்கு பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளது. இந்து மக்களின் நீண்ட நாள் கனவான அயோத்தியில் ராமர் ஆலயத்தை மோடி அமைத்துள்ளார். எனவே 3 வது முறையாகவும் மோடி பிரதமர் ஆக வேண்டும். இதற்காக சங்கத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் குடும்பத்தினர் பாஜகவிற்கு வாக்களிக்க உள்ளோம். கோவையில் போட்டியிடும் அண்ணாமலை மக்களுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்துள்ளதாகவும், எனவே அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பெறச் செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.