வரவு செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகளில் அதிக சத்தம் பயன்படுத்தக் கூடாது, தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் கல்வி பாதிக்கும் படி பிரச்சாரங்கள் இருக்கக் கூடாது என வேட்பாளர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
கோவை: கோவை மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளருக்கான பயிற்சி முகாம் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.31) நடைபெற்றது. இதில் தேர்தல் நடைமுறைகள், வேட்பாளர்கள் பின் பற்ற வேண்டிய வீதி முறைகள்,போட்டியிடும் கட்சிகளான அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் உட்பட சுயேட்சை வேட்பாளர்களுக்கான பயிற்சி கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் பேசிய ஆட்சியர் மீடியாக்களை கவனமாக கையாள வேண்டும், வரவு செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகளில் அதிக சத்தம் பயன்படுத்தக் கூடாது, தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் கல்வி பாதிக்கும் படி பிரச்சாரங்கள் இருக்கக் கூடாது,வழிபாட்டு தலங்களில் பிரச்சாரங்கள் செய்யக்கூடாது என்று தெரிவித்தார். மேலும் இதில் கோவையில் 37 வேட்பாளர், பொள்ளாச்சியில் 18 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


பின்னர் பேசிய ஆட்சியர் மீடியாக்களை கவனமாக கையாள வேண்டும், வரவு செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகளில் அதிக சத்தம் பயன்படுத்தக் கூடாது, தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் கல்வி பாதிக்கும் படி பிரச்சாரங்கள் இருக்கக் கூடாது,வழிபாட்டு தலங்களில் பிரச்சாரங்கள் செய்யக்கூடாது என்று தெரிவித்தார். மேலும் இதில் கோவையில் 37 வேட்பாளர், பொள்ளாச்சியில் 18 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.