கோவை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அன்னம்மாள் புல்லட் ஓட்டி கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் காமராஜபுரத்தில் நேற்று (மார்ச்.31) பிரச்சாரம் மேற்கொள்ள சென்றார்.

அப்போது கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கோவை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அன்னம்மாள் புல்லட் ஓட்டி வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் புதுமையாக இருக்கும் மகளிர் அணி அமைப்பாளரின் இந்த பிரச்சாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
அப்போது கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கோவை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அன்னம்மாள் புல்லட் ஓட்டி வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் புதுமையாக இருக்கும் மகளிர் அணி அமைப்பாளரின் இந்த பிரச்சாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.