உடுமலையில் சாவிகள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து - ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பல்

தீ விபத்தில் விற்பனைக்கு தயாராக இருந்த சாவிகள் மற்றும் சாவி தயாரிக்கும் உயர் ரக இயந்திரங்கள் போன்றவை முற்றிலும் எரிந்து சாம்பலானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி சாலையில் சாவிகள் விற்கும் கடையை இப்ராஹிம் என்பவர் நடத்தி வருகின்றார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அதிகாலை நேரத்தில் கடையில் இருந்து புகை வருகிறது என்று தகவல் கிடைத்த நிலையில் உடனே கடைக்கு வந்து பார்த்த பொழுது கடையில் தீ விபத்து ஏற்பட்டு தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.



பின்னர் உடுமலை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இருப்பினும் விற்பனைக்கு தயாராக இருந்த சாவிகள் மற்றும் சாவி தயாரிக்கும் உயர் ரக இயந்திரங்கள் போன்றவை முற்றிலும் எரிந்து சாம்பலானது இதன் மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என கூறப்படுகின்றது.



தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்து குறித்து உடுமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடுமலை பகுதியில் முக்கிய சாலையில் உள்ள கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிகாலை நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...