கோயம்புத்தூரில் இருந்து (4.4.2024) அன்று 11.55 மணிக்கு புறப்படும் ரயில் எண்.06805 கோயம்புத்தூர்-ஷோரனூர் மெமு ரயில், முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை: தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை-பாலக்காடு கோட்டத்தில், எட்டிமடை-வாளையார் ரயில் நிலையங்களுக்கு இடையே 'யானை வழிப்பாதை' அமைப்பதற்கான பொறியியல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பொறியியல் பணிகளை எளிதாக்க, வரும் (04.04.2024) அன்று ஒரு ஜோடி ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று (ஏப்ரல்.1) அறிவித்துள்ளது.
அதன்படி கோயம்புத்தூரில் இருந்து (4.4.2024) அன்று 11.55 மணிக்கு புறப்படும் ரயில் எண்.06805 கோயம்புத்தூர்-ஷோரனூர் மெமு ரயில், முழுமையாக ரத்து செய்யப்படும். இதேபோல ஷோரனூரில் இருந்து (4.4.2024) 15.10 மணிக்குப் புறப்படும், ரயில் எண்.06804 ஷோரனூர்-கோயம்புத்தூர் மெமு ரயில், முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கோயம்புத்தூரில் இருந்து (4.4.2024) அன்று 11.55 மணிக்கு புறப்படும் ரயில் எண்.06805 கோயம்புத்தூர்-ஷோரனூர் மெமு ரயில், முழுமையாக ரத்து செய்யப்படும். இதேபோல ஷோரனூரில் இருந்து (4.4.2024) 15.10 மணிக்குப் புறப்படும், ரயில் எண்.06804 ஷோரனூர்-கோயம்புத்தூர் மெமு ரயில், முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.