தாராபுரத்தில் பிரச்சாரம் செய்ய வந்த திமுக வேட்பாளர் பிரகாஷூக்கு கருப்பு கொடி காட்டி விவசாயிகள் எதிர்ப்பு

ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ், அமைச்சர் கயல்வியுடன் தேர்பாதை என்ற இடத்திற்கு பிரச்சாரம் செய்வதற்காக வந்தார். அப்போது, கருப்புக்கொடி காட்டி விவசாயிகள் அணைக்கு தண்ணீர் கொடு இல்லையென்றால் வெளியேறு என கோஷமிட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ளது உப்பாறு அணை. இந்த அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து உபரி நீரை அரசூர் சட்ட வழியாக திறந்து விடுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஓர் ஆண்டாக தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி பாசன விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் இடம் ஏழு முறை பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் ஒருமுறை கூட கலெக்டர் உப்பாறு பாசன விவசாயிகள் இடம் பேசவில்லை. இதனால் நீதி கிடைக்க வேண்டும் என உப்பாறு பாசன விவசாயிகள் கெத்தல்ரேவ், தேர்பாதை, பனமரத்து பாளையம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், தொப்பம்பட்டி, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகள், தோட்டங்கள், வணிக நிறுவனங்களில் கருப்பு கொடி கட்டியும் , வராதே! வராதே! ஓட்டுக் கேட்டு ஊருக்குள்ளே வராதே! உப்பாறு அணைக்கு உயிர் நீர் கேட்டு போராடும் போது வராதவர்கள். இன்று, உங்கள் தேவைக்கு ஓட்டுக் கேட்க மட்டும் வராதே!வராதே! ஓட்டுக் கேட்டு யாரும் ஊருக்குள்ளே வராதே என்ற வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்களை கட்டி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.



இந்த நிலையில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் அமைச்சர் கயல்வியுடன் தேர்பாதை என்ற இடத்திற்கு தற்போது பிரச்சாரம் செய்வதற்காக வந்தார். அப்போது அங்கு காத்திருந்த உப்பாறு பாசன விவசாயிகள் கையில் கருப்புக்கொடி காட்டி அணைக்கு தண்ணீர் கொடு இல்லையென்றால் வெளியேறு என கோஷமிட்டவாரு தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர்‌.



இதனை தொடர்ந்து தாராபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி கோரி வந்தார். இந்த நிலையில் வேட்பாளர் பிரகாஷ் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சென்றார். இதனால் தாராபுரம்-பூளவாடி சாலை தேர்பாதை என்ற இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...