உடுமலை அருகே குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

நேற்று மாலை 6:00 மணி அளவில் திமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் ஈரோட்டில் இருந்து வந்த ஆறு பேர் கொண்ட வருமானவரித்துறை குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்கு பிறகு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராக அணிக்கடவு கிரி உள்ளார். இவர் ராமச்சந்திராபுரம் ஊராட்சி அணிக்கடவு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.

இந்த நிலையில் நேற்று மாலை 6:00 மணி அளவில் இவரது வீட்டுக்கு ஈரோடு வருமானவரித்துறை சேர்ந்த அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்கு பிறகு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

இந்த சோதனையில் எவ்வித ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என்பது தெரியவந்தது. நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் திமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை உடுமலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...