கல்லாறு பகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் - பாஜக வேட்பாளர் எல்.முருகன் பிரச்சாரம்

25 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் 2ஜி ராசாவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். நீலகிரி பாராளுமன்றத் தொகுதி முழுக்க எந்த குறைகளையும் அவர் தீர்க்கவில்லை என பாஜக வேட்பாளர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.


கோவை: மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன், மேட்டுப்பாளையம், ஓடந்துறை ஊராட்சியை சேர்ந்த கல்லாறு பகுதியில் இன்று (ஏப்ரல்.2) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.



அப்போது மக்களிடையே பேசிய அவர், இந்த கல்லாறு கிராமத்தில் இருக்கின்ற ஆதிவாசி காலனி மற்றும் சமத்துவபுரம் ஆகிய சிற்றூர்களுக்கு இடையில், மேட்டுப்பாளையம் முதல் உதகை செல்லும் மலை இரயில் பாதை அமைந்துள்ளது. 150-க்கும் மேல் வீடுகள் அமைந்துள்ள, இந்த இரண்டு சிற்றூர்களையும் இணைக்கும் விதமாக சுரங்க நடைபாதை ஒன்று அமைத்துக் கொடுக்கச் சொல்லி, கடந்த 25 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்திருக்கிறார்கள்.



ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதிக்கும், புதிய திட்டப் பணிகள் மேற்கொள்வதற்காக, 2011-12 நிதியாண்டு முதல் தனித்தனியே ஆண்டிற்கு 5 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது. அந்த நிதியை வைத்து, நம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கு தேவைப்படுகிற பணிகளை மேற்கொள்வது தான் அடிப்படை தார்மீகம். அவ்வகையில், இந்த ஊர்மக்கள் சொல்வதுபடி பார்த்தால் 25 ஆண்டுகளில், 10 ஆண்டுகள் 2ஜி ராசாவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். இப்படி, நீலகிரி பாராளுமன்றத் தொகுதி முழுக்கவும், எங்குமே குறைகளும் தீர்க்கப்படவில்லை, வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரும்படி கோரிக்கை வைத்த மக்களிடம், கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதி அளித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...