கோவை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் சார்பில் வீடு தேடி வாக்கு சேகரிக்கும் திட்டத்தில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சம்பந்தமாக வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளது.
கோவை: தமிழகத்தில் வரும் ஏப்.19-ஆம் தேதியன்று ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தேர்தலில் 100% வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
அதன்படி முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் சார்பில் வீடு தேடி வாக்கு சேகரிக்கும் திட்டத்தில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சம்பந்தமாக வீடியோ ஒன்றை இன்று (ஏப்ரல்.1) வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதன்படி முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் சார்பில் வீடு தேடி வாக்கு சேகரிக்கும் திட்டத்தில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சம்பந்தமாக வீடியோ ஒன்றை இன்று (ஏப்ரல்.1) வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.