சமூக வலைத்தளங்களில் பயணியர் குறை தீர்ப்பில் தெற்கு ரயில்வேயில் சேலம் கோட்டம் முதலிடம்.

முன்பு எப்போதுமிராத அளவுக்கு இந்திய ரயில்வேயில் பயணியர் மற்றும் ரயில் உபயோகிப்போரின் குறைகள் தீர்ப்பதில் அதிக கவனம் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு திறனாய்வுக்கூட்டங்களில் இதன் முக்கியத்துவத்தை அதிகமாக வலியுறுத்தி வருகின்றனர்.

அத்தகு கூட்டங்களில் சமூக வலைத்தளங்கள் உட்பட்ட அனைத்து குறைதெரிவிப்பு முனையங்களிலும் தெரிவிக்கப்படும் குறைகளும், அவைகள் தீர்க்கப்பட எடுத்துக் கொள்ளப்படும் கால அவகாசங்களும் சீராய்வு செய்யப்படுகின்றன. 

இந்திய ரயில்வே இவ்வாறு பெறப்பட்ட 90 சதவீத குறைகளை இது வரை தீர்த்து வந்துள்ளது. 

சமீபத்தில், ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேக்கு இது குறித்த ஓர் ஆய்வறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பெறப்பட்ட புகார்களுக்கு பதிலளிப்பிதில் தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் மிக விரைந்து செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சேலம் கோட்டம் சமூக வலைத்தளங்கள் மூலமாக பெறப்படும் புகார்களுக்கு தெற்கு ரயில்வேயின் மற்ற கோட்டங்களை விட விரைவாக, (திருச்சி கோட்டம்-454 நிமிடங்கள், பாலக்காடு கோட்டம்-402 நிமிடங்கள், சென்னைக் கோட்டம்-151 நிமிடங்கள், திருவனந்தபுரம் கோட்டம்-82 நிமிடங்கள்)   அதாவது 12 நிமிடங்களில் பதிலளித்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா, இவ்வாறு திறமையாக செயல்பட்டு பயணிகள் குறைதீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவரும் சேலம் கோட்ட முதுநிலை வணிகவியல் மேலாளர் விஜுவின் தலைமையிலான வணிகவியல் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...