காங்கேயத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்கு சேகரிப்பு

மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு பொதுமக்கள் நாள் குறித்து விட்டனர் என்றும், அம்மா காலத்தில் செயல்படுத்திய அனைத்து திட்டங்களையும் திமுக அரசு நிறுத்திவிட்டது என்றும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேசினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் கீரனூர் மற்றும் சாவடிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்நிகழ்விற்கு காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என். நடராஜ் தலைமை தாங்கினார்.



அதிமுக ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேசுகையில் மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு பொதுமக்கள் நாள் குறித்து விட்டனர் என்றும், நமது அம்மா காலத்தில் செயல்படுத்திய அனைத்து திட்டங்களையும் திமுக அரசு நிறுத்திவிட்டது என்றும், மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி, மிதிவண்டி, பொதுமக்களுக்கு இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம், பெண்கள் தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது எனவும் குறிப்பிட்டார்.



மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா அரசு வழங்கிய நலத்திட்ட உதவிகளை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். மதுபான கடைகளை மூடுவதாக அறிவித்துவிட்டு மேலும் புதிய மதுபான கடைகளை திறந்து வைத்துள்ளனர். இப்போது புதிதாக குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய போதை பொருள்களை மிட்டாய்களில் கலந்து விற்பனை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். அடுத்த தலைமுறைகளை கெடுக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டுள்ளது. திமுக அரசு வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தாமல் பொதுமக்களின் அடிப்படைத் வரி உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட வரிகளை அதிகப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்நிகழ்வில் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி சோமசுந்தரம், மறவா பாளையம் ஊராட்சி செயலாளர் பி.கே.பி சண்முகம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...