ஹெல்ப் ஏஜ் இந்தியா மற்றும் ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த் நடத்தும்  முதியவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்


ஹெல்ப் ஏஜ் இந்தியா மற்றும் ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த் இணைந்து நடத்தும் முதியவர்களுக்குக்கான இலவச பொது மருத்துவ முகாம் இன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை கரும்புக்கடை பகுதியில் உள்ள அண்ணா காலனி, டஸ்க் பார்கில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 60 க்கும் மேற்பட்ட முதியோர்கள் மற்றும் ஊழியர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.



இம்முகாமில், 50 க்கும் மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் ரத்த அழுத்தம் மற்றும் உடல் சம்பந்தமான நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் முழங்கால் வலி, மூட்டு வலி மற்றும் உடம்பு வலி போன்ற பிரச்சனைகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இம்முகாமில் கண்கள் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் உள்ளவர்களுக்கு கோவையில் உள்ள மோசஸ் கண் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மேலும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அரசு மருத்துவமனைக்கு ஹெல்ப் ஏஜ் இந்தியா மூலம் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இம்முகாம் இப்பகுதியில் இனி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் 12 மணி வரை செயல்படும். இதுபோன்ற இலவச பொது மருத்துவ முகாம் ஹெல்ப் ஏஜ் இந்தியா 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று உதவி வருகிறது.



இந்த முகாமினை கோவை ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த் டஸ்க் ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஹக்கீம் ஏற்பாடு செய்தார். இதில், வெல்பெர் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநில துணை செயலாளர் ஆஷிக், டஸ்க் பார்க் ஒருங்கிணைப்பாளர் முகம்மது ரபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...