ஹெல்ப் ஏஜ் இந்தியா மற்றும் ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த் இணைந்து நடத்தும் முதியவர்களுக்குக்கான இலவச பொது மருத்துவ முகாம் இன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை கரும்புக்கடை பகுதியில் உள்ள அண்ணா காலனி, டஸ்க் பார்கில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 60 க்கும் மேற்பட்ட முதியோர்கள் மற்றும் ஊழியர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இம்முகாமில், 50 க்கும் மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் ரத்த அழுத்தம் மற்றும் உடல் சம்பந்தமான நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் முழங்கால் வலி, மூட்டு வலி மற்றும் உடம்பு வலி போன்ற பிரச்சனைகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இம்முகாமில் கண்கள் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் உள்ளவர்களுக்கு கோவையில் உள்ள மோசஸ் கண் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மேலும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அரசு மருத்துவமனைக்கு ஹெல்ப் ஏஜ் இந்தியா மூலம் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இம்முகாம் இப்பகுதியில் இனி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் 12 மணி வரை செயல்படும். இதுபோன்ற இலவச பொது மருத்துவ முகாம் ஹெல்ப் ஏஜ் இந்தியா 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று உதவி வருகிறது.

இந்த முகாமினை கோவை ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த் டஸ்க் ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஹக்கீம் ஏற்பாடு செய்தார். இதில், வெல்பெர் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநில துணை செயலாளர் ஆஷிக், டஸ்க் பார்க் ஒருங்கிணைப்பாளர் முகம்மது ரபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.