பொள்ளாச்சி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து திருவள்ளுவர் திடலில் ER. ஈஸ்வரன் பரப்புரை

பிஜேபி அரசு தமிழகத்திற்கு நிதி வழங்குவதில்லை. ஆளுநரை வைத்து அட்டூழியம் செய்கின்றார்கள். எந்த கோப்புகளிலும் கையெழுத்து போடுவதில்லை. முதலமைச்சரை இயங்க விடுவதில்லை என்று பிரதமர் மோடியை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ER ஈஸ்வரன் சாடினார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஈஸ்வரசாமியை ஆதரித்து திருவள்ளுவர் திடலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ER ஈஸ்வரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய போது., மத்தியில் ஆளும் பிஜேபி அரசால் பத்தாண்டுகள் இந்த நாடு சீரழிக்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. ஆனால் நாடு முன்னேறி விட்டது என்று சொல்கின்றார்கள்.



மோடியை முன்னிறுத்தி உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்த்து இந்தியா முன்னேறி விட்டதாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகின்றார்கள். குறிப்பாக தமிழ்நாட்டை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திற்கு நிதி வழங்குவதில்லை. ஆளுநரை வைத்து அட்டூழியம் செய்கின்றார்கள். எந்த கோப்புகளிலும் கையெழுத்து போடுவதில்லை. முதலமைச்சரை இயங்க விடுவதில்லை. கடலுக்கு அடியில் சென்றும், வானத்தில் சென்றும், திருவள்ளுவரையும் சாமி கும்பிடுவர், ஆனால் டெல்லியில் போராடும் விவசாயிகளை கண்டு கொள்ள மாட்டார். மத்திய அரசின் தவறான கொள்கைகளால் சிறு குறு தொழில்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறது என ER.ஈஸ்வரன் பேசினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...