அவிநாசி அருகே தொரவலூரில் முனியப்பசாமி கோவில் பொங்கல் விழா – நேர்திகடனாக 500க்கும் மேற்பட்ட கிடாய்களை வழங்கிய பக்தர்கள்

பக்தர்கள் வழங்கிய 500க்கும் மேற்பட்ட கிடாய்களில் 150 கிடாய்களை வெட்டி பக்தர்களுக்கு அன்னதானமாக போடப்பட்டதாக கோட்டை முனியப்ப சாமி கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட தொரவலூர் பகுதியில் அருள்மிகு கோட்டை முனியப்ப சாமி திருக்கோயில் உள்ளது. அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 200 ஆண்டுகளுக்கு மேலாக பொங்கல் திருவிழா பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த வருடம் பொங்கல் திருவிழா இன்று நடைபெற்றது.



கடந்த 18ஆம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்வுடன் பொங்கல் திருவிழா தொடங்கப்பட்ட நிலையில் திங்கட்கிழமை சுவாமி கண் திறப்பு மற்றும் கோவில் புகுதல் நிகழ்வு நடைபெற்றது. முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நடைபெற்றது. இதில் பரவலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.



கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் வகையில் 500க்கும் மேற்பட்ட கிடாய்களை பக்தர்கள் வழங்கி இருப்பதாகவும், இதில் கோவில் அன்னதானத்திற்கு 150க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு 15 ஆயிரம் பேருக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட இருப்பதாகவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை மறுபூஜையும் சைவ அன்னதானமும் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...