காங்கேயத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு லட்டு வழங்கி போக்குவரத்து காவல்துறை வரவேற்பு

போக்குவரத்து விதிகளை பின்பற்றும் வகையிலும், சாலை விபத்தை தவிர்க்கும் வகையிலும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்கள் மற்றும் காரில் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்கள் ஆகியோருக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் சமூக ஆர்வலர் சுல்தான்பேட்டை வள்ளி கனகராஜ் ஆகியோர் லட்டுகளை வழங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் போக்குவரத்து விதிகளை பின்பற்றும் வகையிலும், சாலை விபத்தை தவிர்க்கும் வகையிலும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்கள் மற்றும் காரில் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்கள் ஆகியோருக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் சமூக ஆர்வலர் சுல்தான்பேட்டை வள்ளி கனகராஜ் ஆகியோர் தலைமையில் லட்டுகளை வழங்கி ஊக்குவித்தனர்.



இதனை தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனத்தை ஓட்டி வருபவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், சாலை விபத்துகளை குறைக்க ஒத்துழைக்க வேண்டும் எனவும் காவல் துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகளை வழங்கினர். மேலும் இந்நிகழ்வில் போக்குவரத்து போலிசார்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும் நெடுஞ்சாலை மற்றும் சிக்னல்களில் வெயிலில் அயராது பொதுமக்களுக்காக உழைக்கும் சுமார் 10க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்களுக்கு தாகத்தை குறைக்கும் வகையில் இளநீர் வழங்கப்பட்டு‌ காவலர்களையும் உற்சாகப்படுத்தப்பட்டது. காங்கேயம் ரவுண்டானா, கரூர் சாலை, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இது போன்று வாகன ஓட்டிகளுக்கு லட்டுகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...