ஏப்ரல் 6ம் தேதி கோவை-மேட்டுப்பாளையம் இடையே மாலை 5.55 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், மேட்டுப்பாளையம்-கோவை இடையே மாலை 4.45 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை தெற்கு இரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மேட்டுப்பாளையம் இடையே தினமும் 5 முறை மெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் இருப்புப்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று கோவை-மேட்டுப்பாளையம் இடையே கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு காலை 11.50 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், மேட்டுப்பாளையம் - கோவை இடையே காலை 10.55 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
அதே போல் வரும் ஏப்ரல் 6ம் தேதி கோவை-மேட்டுப்பாளையம் இடையே மாலை 5.55 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், மேட்டுப்பாளையம் - கோவை இடையே மாலை 4.45 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் 8 ,11 ,13ம் தேதிகளில் கோவை - மேட்டுப்பாளையம் இடையே மதியம் 3.45 மணி, மேட்டுப்பாளையம் - கோவை இடையே மதியம் 12.55 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
அதே போல் வரும் 14 , 16 , 20 , 22 , 24ம் தேதிகளில் கோவை - மேட்டுப்பாளையம் இடையே காலை 11.50 மணி, மேட்டுப்பாளையம் - கோவை இடையே காலை 10.55 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
அதே போல் வரும் ஏப்ரல் 6ம் தேதி கோவை-மேட்டுப்பாளையம் இடையே மாலை 5.55 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், மேட்டுப்பாளையம் - கோவை இடையே மாலை 4.45 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் 8 ,11 ,13ம் தேதிகளில் கோவை - மேட்டுப்பாளையம் இடையே மதியம் 3.45 மணி, மேட்டுப்பாளையம் - கோவை இடையே மதியம் 12.55 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
அதே போல் வரும் 14 , 16 , 20 , 22 , 24ம் தேதிகளில் கோவை - மேட்டுப்பாளையம் இடையே காலை 11.50 மணி, மேட்டுப்பாளையம் - கோவை இடையே காலை 10.55 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.