கோவை, செட்டிபாளையம் எல் அண்ட் டி பை-பாஸ் ரோட்டில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் கலந்துகொள்ள உள்ளதாக திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.
கோவை: ஏப்ரல்-19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, எம்.பி., உடன் இணைந்து வருகிற 12-04-2024 வெள்ளிக் கிழமை அன்று, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை, செட்டிபாளையம் L&T பை-பாஸ் ரோட்டில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இவ்வாறு தலைமை கழகம் தெரிவித்துள்ளது.