அவிநாசியில் தெலுங்கில் பேசி பாஜக வேட்பாளர் எல்.முருகன் வாக்கு சேகரிப்பு

கருவலூர் பகுதியில் திறந்த வாகனத்தில் நின்றவாறு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெலுங்கில் பேசி பாஜக வேட்பாளர் எல்.முருகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


திருப்பூர்: நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி சட்டப்பேரவை தொகுதியை உள்ளடங்கிய கருவலூர், நரியம்பள்ளி புதூர், திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.



முன்னதாக அவிநாசி சட்டத் பேரவை தொகுதிக்குட்பட்ட நரியம்பள்ளி புதூர் பகுதியில் வருகை தந்த அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நரியம்பள்ளிபுதூர் அருகே ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்த பெண்கள் வேட்பாளரை வரவேற்றபோது தெலுங்கில் பேசி மத்திய அரசின் திட்டங்களை விளக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



தொடர்ந்து கருவலூர் பகுதிக்குச் சென்ற எல்.முருகன் திறந்த வாகனத்தில் நின்றவாறு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெலுங்கில் பேசி வாக்குகளை சேகரித்தார். இதில் பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு, இலவச கேஸ் உள்ளிட்ட திட்டங்கள் அனைவரையும் வந்தடைந்ததா என கேட்டு திட்டங்களின் சிறப்புகள் குறித்தும், மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைய வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசி பரப்புரை மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...