கோவையில் தேர்தல் பரப்புரை செய்வது குறித்து திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஆகியோரின் வாக்குகளை வீடுகளுக்கே சென்று பதிவு செய்யும் பணிகளை கண்காணிப்பது, வாக்காளர்களை தொடர்ந்து சந்தித்து வாக்கு சேகரிப்பது போன்ற பணிகள் குறித்து திமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட திமுக, பெரியகடைவீதி பகுதி - 1 அலுவலகத்தில், கோவை நாடாளுமன்ற தொகுதி, இந்தியா கூட்டணி திமுகழக‌ வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரி தேர்தல் பரப்புரை செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று (ஏப்ரல்.4) நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு BLA-2 பூத் கமிட்டி உறுப்பினர்கள் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரது வாக்குகளை வீடுகளுக்கே சென்று பதிவு செய்யும் பணிகளை தொடங்குவதை‌ கண்காணிப்பது, வாக்காளர்களை தொடர்ந்து சந்தித்து, வாக்கு சேகரிப்பது போன்ற பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கிப் பேசினார்.



இந்த நிகழ்வில் தெற்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளர் நாகராஜ், பெரிய கடைவீதி பகுதி-1 செயலாளர் மார்க்கெட் எம்.மனோகரன், பழக்கடை முத்து முருகன், வட்டக் கழகச் செயலாளர்கள் டவுன் பா.ஆனந்த், ப.ப.சிவக்குமார்,சுரேஷ் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...