சோனியா காந்தியை இழிவாக பேசிய பாஜக எச்.ராஜாவைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செய்தியாளர் சந்திப்பின் போது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, சோனியா காந்தியை இழிவாகப் பேசியதைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தஞ்சாவூரில் செய்தியாளர் சந்திப்பின் போது தில்லியில் போராடி வரும் விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்காதது குறித்தும், விவசாயிகளுக்கான மானியங்கள் குறைத்து வழங்கியது குறித்தும் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த எச்.ராஜா, ஊடங்கங்கள் தேச விரோதமாக செயல்படுவதாக தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை இழிவுபடுத்தியும் பேசினார். இந்த வீடியோக் காட்சிகள் சமூக வளைதளங்களில் வேகமாக பரவிவருகின்றன. 

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் இத்தகைய இழிவான பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது எச்.ராஜா மன்னிப்பு கேற்கும் வரை தங்களது போராட்டத்தை தொடரப் போவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து, எச்.ராஜாவின் உருவப்படத்தையும் எரிக்க முயன்றனர். அப்போது காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தனர். இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...