செய்தியாளர் சந்திப்பின் போது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, சோனியா காந்தியை இழிவாகப் பேசியதைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தஞ்சாவூரில் செய்தியாளர் சந்திப்பின் போது தில்லியில் போராடி வரும் விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்காதது குறித்தும், விவசாயிகளுக்கான மானியங்கள் குறைத்து வழங்கியது குறித்தும் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த எச்.ராஜா, ஊடங்கங்கள் தேச விரோதமாக செயல்படுவதாக தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை இழிவுபடுத்தியும் பேசினார். இந்த வீடியோக் காட்சிகள் சமூக வளைதளங்களில் வேகமாக பரவிவருகின்றன.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் இத்தகைய இழிவான பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது எச்.ராஜா மன்னிப்பு கேற்கும் வரை தங்களது போராட்டத்தை தொடரப் போவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, எச்.ராஜாவின் உருவப்படத்தையும் எரிக்க முயன்றனர். அப்போது காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தனர். இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தஞ்சாவூரில் செய்தியாளர் சந்திப்பின் போது தில்லியில் போராடி வரும் விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்காதது குறித்தும், விவசாயிகளுக்கான மானியங்கள் குறைத்து வழங்கியது குறித்தும் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த எச்.ராஜா, ஊடங்கங்கள் தேச விரோதமாக செயல்படுவதாக தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை இழிவுபடுத்தியும் பேசினார். இந்த வீடியோக் காட்சிகள் சமூக வளைதளங்களில் வேகமாக பரவிவருகின்றன.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் இத்தகைய இழிவான பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது எச்.ராஜா மன்னிப்பு கேற்கும் வரை தங்களது போராட்டத்தை தொடரப் போவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, எச்.ராஜாவின் உருவப்படத்தையும் எரிக்க முயன்றனர். அப்போது காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தனர். இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.