கோவையில் 100 முதல் முறை வாக்காளர்கள் அண்ணாமலைக்கு வாக்களிக்க உள்ளதாக அறிவிப்பு

பாஜக எற்பாடு செய்த நிகழ்வில், உருமாண்டம்பாளையம் பகுதியில் முதல் முறை வாக்களிக்கவுள்ள 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அண்ணாமலைக்கு வாக்களிக்க உள்ளதாக தெரிவித்தனர்.


கோவை: கோவை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார். தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.



இந்தநிலையில் கோவை உருமாண்டம்பாளைய் பகுதியில் முதல் முறை வாக்காளர்களாக வாக்களிக்கவுள்ள 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடினர்.



அவர்கள் அனைவரும் மோடி மற்றும் அண்ணாமலையில் செயல்பாடு பிடித்திருப்பதாகவும், மத்தியில் மீண்டும் மோடி பிரதமர் ஆக வேண்டி தங்களின் முதல் வாக்குகளை கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலைக்கு செலுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் கல்லூரியில் பயிலும் அனைவரும் மாலை நேரங்களில் தங்கள் கல்லூரி நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் வீடுகளுக்கு சென்று அண்ணாமலைக்காக தன்னார்வளர்களாக செயல்பட்டு வாக்குசேகரிக்கப்போவதாகவும் தெரிவித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை தேசிய வாக்காளர் பேரவை நிர்வாகி உருவை பாலன் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் இந்திரா, மரகதம், சாந்தகுமார், ராஜேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...