கோவையில் 100 முதல் முறை வாக்காளர்கள் அண்ணாமலைக்கு வாக்களிக்க உள்ளதாக அறிவிப்பு

பாஜக எற்பாடு செய்த நிகழ்வில், உருமாண்டம்பாளையம் பகுதியில் முதல் முறை வாக்களிக்கவுள்ள 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அண்ணாமலைக்கு வாக்களிக்க உள்ளதாக தெரிவித்தனர்.


கோவை: கோவை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார். தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.



இந்தநிலையில் கோவை உருமாண்டம்பாளைய் பகுதியில் முதல் முறை வாக்காளர்களாக வாக்களிக்கவுள்ள 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடினர்.



அவர்கள் அனைவரும் மோடி மற்றும் அண்ணாமலையில் செயல்பாடு பிடித்திருப்பதாகவும், மத்தியில் மீண்டும் மோடி பிரதமர் ஆக வேண்டி தங்களின் முதல் வாக்குகளை கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலைக்கு செலுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் கல்லூரியில் பயிலும் அனைவரும் மாலை நேரங்களில் தங்கள் கல்லூரி நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் வீடுகளுக்கு சென்று அண்ணாமலைக்காக தன்னார்வளர்களாக செயல்பட்டு வாக்குசேகரிக்கப்போவதாகவும் தெரிவித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை தேசிய வாக்காளர் பேரவை நிர்வாகி உருவை பாலன் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் இந்திரா, மரகதம், சாந்தகுமார், ராஜேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...