சின்னக்கம்பாளையத்தில் கோழிப்பண்ணையால் சுகாதார சீர்கேடு - தேர்தலை புறக்கணிக்கபோவதாக பொதுமக்கள் அறிவிப்பு

கோழிப்பண்ணை செயல்படும் இடத்தில் இருந்து 500 மீட்டருக்குள் குடியிருப்புகள் இல்லை என அறிக்கை தந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவிற்குட்பட்ட சின்னக்கம்பாளையம் ஆறாவது வார்டில் செயல்படும் தனியார் தாய் கோழிப்பண்ணையால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



இந்த மனுவின் மீது கால்நடை பராமரிப்பு துறை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் கால்நடை பராமரிப்பு மண்டல இயக்குனர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் கோழிப்பண்ணை செயல்படும் இடத்தில் இருந்து 500 மீட்டருக்குள் குடியிருப்புகள் இல்லை என அறிக்கை தந்ததால் சுகாதார சீர்கேட்டின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து வருகிறது எனவும், எனவே தங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் குடியிருப்புகளே இல்லை என அறிக்கை தந்த அதிகாரிகளை கண்டிக்கும் வகையில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை 57 குடும்பத்தினரும் புறக்கணித்து தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கிறோம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...