குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு கவுண்டச்சிபுதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்

உடனடியாக தண்ணீர் கிடைக்க தீர்வு காணும் வரை ஊராட்சி மன்ற அலுவலகத்தை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என கூறி மாருதி நகர் பகுதி மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மாருதி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாருதி நகர் பகுதியில் குடிநீர், தெரு விளக்கு, மின்சார வசதி மற்றும் சாக்கடை வசதிகள் சரிவர செய்து தராததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கவுண்டச்சிபுதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



மேலும் கோடை காலம் என்பதால் குடிநீர் இரண்டு மற்றும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆழ்துளை கிணறுகளில் பழுதாகும் மின்மோட்டார் களை சரி செய்து மீண்டும் இயக்கி வருகின்றனர். எனவே புதிய மின் மோட்டார்களை அமைத்து சீராக தண்ணீர் வழங்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாருதி நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் உடனடியாக தண்ணீர் கிடைக்க தீர்வு காணும் வரை ஊராட்சி மன்ற அலுவலகத்தை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...