வறட்சி நிவாரணம் மற்றும் விவசாய வங்கிக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லியில் 18-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பாக காய்கறிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, தமிழகத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டுமெனவும், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் வலியுறுத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொணடனர்.