வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகள் மற்றும் மேட்டுப்பாளையம் உழவர் சந்தையின் செயல்பாடுகள் பற்றி மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
கோவை: வாணவராயர் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் "கிராம தங்கல்" திட்டத்தின் ஒரு பகுதியாக உழவர் சந்தை மேட்டுப்பாளையத்தில் இன்று (ஏப்ரல்.5) பார்வையிட்டனர்.
அப்போது நிர்வாக அலுவலர் ஷர்மிளா, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகள் மற்றும் மேட்டுப்பாளையம் உழவர் சந்தையின் செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார்.
அங்கு சுவர் ஓவியமாக காய்கறிகளின் பயன்பாடுகளை தீட்டி உள்ளது மிகவும் பயனாக உள்ளது. இங்கு விவசாயிகளுக்கு இலவசமாக எடையிடும் மின்னணு தராசு, மேடை தராசு, குளிர் சேமிப்பு கிடங்கு, பேருந்து வசதி, மீண்டும் மஞ்சப்பை துணிப்பை இயந்திரம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
அவரையில் மூக்குத்தி அவரை, சிறகு அவரை, தம்பட்டை அவரை மற்றும் டபுள் பீன்ஸ் மாணவிகள் புதிதாக தெரிந்து கொண்டார்கள். மேட்டுப்பாளையம் உழவர் சந்தை பயன்பாடுகள் மிகவும் பயனுள்ளதாக அமையப்பெற்றது என மாணவர்கள் தெரிவித்தனர்.
அப்போது நிர்வாக அலுவலர் ஷர்மிளா, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகள் மற்றும் மேட்டுப்பாளையம் உழவர் சந்தையின் செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார்.
அங்கு சுவர் ஓவியமாக காய்கறிகளின் பயன்பாடுகளை தீட்டி உள்ளது மிகவும் பயனாக உள்ளது. இங்கு விவசாயிகளுக்கு இலவசமாக எடையிடும் மின்னணு தராசு, மேடை தராசு, குளிர் சேமிப்பு கிடங்கு, பேருந்து வசதி, மீண்டும் மஞ்சப்பை துணிப்பை இயந்திரம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
அவரையில் மூக்குத்தி அவரை, சிறகு அவரை, தம்பட்டை அவரை மற்றும் டபுள் பீன்ஸ் மாணவிகள் புதிதாக தெரிந்து கொண்டார்கள். மேட்டுப்பாளையம் உழவர் சந்தை பயன்பாடுகள் மிகவும் பயனுள்ளதாக அமையப்பெற்றது என மாணவர்கள் தெரிவித்தனர்.