எடிட் செய்து வீடியோ வெளியீடு - புகார் அளிக்க இருப்பதாக திருப்பூரில் பாஜக வேட்பாளர் முருகானந்தம் விளக்கம்

பறக்கும்படை என்பவர்கள் தன்மையாக பேச வேண்டும். பறந்து யாரும் வரவில்லை. அவர்களும் மனிதர்கள் தான். நான் கடந்து செல்லும்போது ஒரு விவசாயிடம் ஒருமையில் பேசினார்கள். அதை பார்த்து மரியாதையாக பேசுமாறு கூறினேன் என்று பறக்கும் படையினரை மிரட்டியது தொடர்பான புகாருக்கு முருகானந்தம் விளக்கம் அளித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் நல்லூர், மனியாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர் முருகானந்தம் பிரசாரம் மேற்கொண்டார்.



அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் பேசியதாக வெளியான வீடியோ பாதியை எடிட் செய்து பாதியை போட்டு இருக்கிறார்கள். பறக்கும்படை என்பவர்கள் தன்மையாக பேச வேண்டும். பறந்து யாரும் வரவில்லை. அவர்களும் மனிதர்கள் தான். நான் கடந்து செல்லும்போது ஒரு விவசாயிடம் ஒருமையில் பேசினார்கள். அதை பார்த்து மரியாதையாக பேசுமாறு கூறினேன்.

அந்த காட்சியை பார்த்து விட்டு சும்மா போக முடியாது. அதனால் மரியாதையாக பேசுங்கள் என்று கூறியதாகவும், அதில் பாதி வீடியோவை எடிட் செய்து போட்டிருக்கிறார்கள். பறக்கும்படை கேமரா மேன் வீடியோவை ஐந்து நிமிடத்தில் ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கு அளித்திருப்தன் மூலம் திட்டமிட்டு இதை செய்கிறார்கள் என்பது தெரிகிறது. இதுகுறித்து நானும் புகார் அளிக்க உள்ளேன். தொடர்ந்து என்னை குறிவைத்து துன்புறுத்துவதன் காரணம் என்ன?. இதை சட்டப்படி அணுக இருப்பதாக கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...