இரண்டாம் சபரிமலை என்று அழைக்கப்படும் ஐயப்ப சாமி கோவிலில் வருகின்ற 12-ம் தேதி ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது, 2000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்க கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை சித்தாபுதூரில் அமைந்துள்ள இரண்டாம் சபரிமலை என்று அழைக்கப்படும் ஐயப்ப சாமி கோவிலில் வருகின்ற 12-ம் தேதி ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சியின் தொடக்க விழாவாக இன்று மாலை கொடி ஏற்றம் நிகழ்ச்சி ஆலயத்தின் தந்தை பிரம்மஸ்ரீ பாலக்காட்டில்லத்து சிவப்பிரசாத் நம்பூதிரி தலைமையில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கொடியேற்றும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் எட்டு காலம் பூஜைகள் நடைபெற உள்ளது.

12-ம் தேதி அன்று சுவாமி ஐயப்பன் திருவுருவ உற்சவ சிலையை மூன்று யானைகளுடன் மேல் அமர்த்தி செண்டை மேளம் முழங்க பஞ்சவாத்தியம் உடன் சித்தாபுதூர், சத்தி ரோடு, கிராஸ் கட் ரோடு, 100 அடி ரோடு வழியாக ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு இறுதி நாளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும் 2000 க்கு மேற்பட்டோருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து கொடியேற்றும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் எட்டு காலம் பூஜைகள் நடைபெற உள்ளது.
12-ம் தேதி அன்று சுவாமி ஐயப்பன் திருவுருவ உற்சவ சிலையை மூன்று யானைகளுடன் மேல் அமர்த்தி செண்டை மேளம் முழங்க பஞ்சவாத்தியம் உடன் சித்தாபுதூர், சத்தி ரோடு, கிராஸ் கட் ரோடு, 100 அடி ரோடு வழியாக ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு இறுதி நாளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும் 2000 க்கு மேற்பட்டோருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட உள்ளது.