பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பண்ணை நிலத்தில் நேற்று சுமார் 3 முதல் 4 மாத ஆன ஆண் யானைக் குட்டி தனியாக தவித்துக்கொண்டிருந்தது. அந்த யானைக்குட்டியை மீட்டு தாயுடன் வனத்துறையினர் சேர்த்து வைத்தனர்.
கோவை: கோவை கோட்டத்திற்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பண்ணை நிலத்தில் நேற்று (ஏப்ரல்.06) சுமார் 3 முதல் 4 மாத வயதுடைய ஆண் யானைக் குட்டி கண்டு பிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த யானை குட்டியை அதன் தாயுடன் மீண்டும் வனத்துறையினர் சேர்த்தனர். மேலும் தாய் மற்றும் குட்டியை கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அந்த யானை குட்டியை அதன் தாயுடன் மீண்டும் வனத்துறையினர் சேர்த்தனர். மேலும் தாய் மற்றும் குட்டியை கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.