வெள்ளலூர் குப்பை கிடங்கில் தொடரும் தீயணைப்பு பணிகள்..!

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் சனிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டததையடுத்து 100 -க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 15 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் நேற்று, சனிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இன்றும் தீ எரிந்து வருவதால்,தீயை அணைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையர் எம்.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணிகளை பார்வையிட்டனர்.

திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டத்தில் இருந்து என மொத்தம் 15 தீயணைப்பு வாகனங்கள், கனரக வாகனங்கள், தண்ணீர் லாரிகள், 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள், என போர்க்கால அடிப்படையில் தீயை கட்டுக்குள் கொண்டுவரமுயற்சித்து வருகின்றனர்.

மேலும், தீ பரவலை கண்காணிப்பதற்காக,ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 60 ஏக்கரில் தீ பரவி இருப்பதாகவும், நாளை வரை தீயணைப்பு பணி தொடரும் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுவரை இல்லாத அளவிற்கு இது மிகப்பெரிய தீ பரவலாக உள்ளதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், பெரும்பாலான பகுதி கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், புகைமூட்டம் தொடர்வதால், குடியிருப்பு வாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர், என்றனர்.

சமீபத்தில், கோவையில் அதிகப்படியான வெப்பம் நிலவி வருவதால், தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டாலும், மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளிவரவில்லை.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...