கோவையில் சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி முதல்வரை மாற்றகோரி மாணவர்கள் 5-வது நாளாக போராட்டம்


கோவையில் மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி முதல்வரை மாற்றகோரி அக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 5-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து, துணி துவைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அவினாசி சாலை பீளமேடு அருகே மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கீழ் சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளிடம்,  அக்கல்லூரியின் பாதுகாப்பு அலுவலர் கலைச்செல்வன் என்பவர் ஆபாச வார்த்தைகளை பேசுவதாகவும், இதனை தட்டி கேட்க வேண்டிய கல்லூரி முதல்வர் பெருமாள்சாமி, மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவதாகவும் குற்றம்சாட்டி, மாணவ மாணவியர் கடந்த 4 நாட்களாக வகுப்புகள் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்லூரி முதல்வர் மற்றும் பாதுகாப்பு அலுவலர் மீது ஏற்கனவே கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி 5-வது நாளாக  இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், கல்லூரி வளாகத்திலேயே துணி துவைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக கல்லூரி முதல்வர் மற்றும் பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மத்திய அரசின் செயல்பாட்டின் கீழ் இயங்கும் இக்கல்லூரியில் போதிய திறமை வாய்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆய்வக வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியர்கள் தெரிவித்தனர். மேலும், நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...