லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் பம்புசெட் நிறுவனங்களுக்கு பின்னடைவு ஏற்படும் என சைமா தலைவர் தகவல்

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் கோவையில் இயங்கி வரும் பம்புசெட் நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என சைமா தலைவர் கே.கே.ராஜன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

பல்வேறு சிக்கல்களில் இருந்து விடுபட்டு பம்புசெட்டுகளின் விற்பனை அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில் லாரிகள் வேலைநிறுத்தம் எதிர்பாராதது. மேலும், கோவையில் இயங்கிவரும் பம்புசெட்டு நிறுவனங்களுக்கு இந்த வேலை நிறுத்தம் பெரும் பின்னடைவினை ஏற்படுத்தும். சுமார் 50 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் லாரிகள் வேலை நிறுத்தத்தால் கோவையில் இயங்கிவரும் பம்புசெட் நிறுவனங்களுக்கு தேவைப்படும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் மூலப் பொருட்கள் வரத்து தடைபட்டுள்ளது.

உற்பத்தி செய்யப்பட்டுள்ள பல கோடி பெறுமானமுள்ள பம்புசெட்டுகள் விற்பனைக்கு பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் தொழிற்சாலைகளில் தேக்கமடைந்துள்ளன.

இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களுடன் கலந்து பேசி இந்த லாரிகள் வேலைநிறுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என சைமா சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என சைமா தலைவர் கே.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...