உக்கடம், கோட்டைமேடு, கரும்புக்கடை, குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் இஸ்லாமியர்கள் புத்தாடைகள் வாங்குவதற்காக குவிந்துள்ளதால் ரம்ஜான் பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது.
கோவை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவை கரும்புகடை, கோட்டைமேடு பகுதியில் புத்தாடைகள் வாங்க பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் குவிந்துள்ளனர்.
முதன் முதலில் ஆல்குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூரும் விதமாக நோன்பு வைத்து இஸ்லாமிய மக்கள் கொண்டாடுவது வழக்கம். அதனை தொடர்ந்து இந்த மாதத்தில் பெரும்பாலான இஸ்லாமியர்கள் உண்ணாவிரதம் இருந்து நோன்பு வைத்து பல்வேறு சிறப்பு தொழுகைகளுக்குப் பிறகு நோன்பு வைப்பார்கள். 30 நாட்களுக்குப் பிறகு நோன்பு முடிந்து ரம்ஜான் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.

இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை போற்றும் வகையில், கோவையில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியான உக்கடம், கோட்டைமேடு, கரும்புக்கடை, குனியமுத்தூர் ஆகிய பகுதியில் இஸ்லாமியர்கள் புத்தாடைகள் வாங்குவதற்காக குவிந்துள்ளனர்.

அதேபோல், புத்தாடை வாங்கும் ஜவுளிக் கடைகளில் குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது.

புத்தாடைகள் வாங்கும் போது, பெற்றோர்கள் விளையாட்டு உபகரணங்களில் தங்கள் குழந்தைகளை விளையாட வைத்து மகிழ்வித்தனர்.
முதன் முதலில் ஆல்குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூரும் விதமாக நோன்பு வைத்து இஸ்லாமிய மக்கள் கொண்டாடுவது வழக்கம். அதனை தொடர்ந்து இந்த மாதத்தில் பெரும்பாலான இஸ்லாமியர்கள் உண்ணாவிரதம் இருந்து நோன்பு வைத்து பல்வேறு சிறப்பு தொழுகைகளுக்குப் பிறகு நோன்பு வைப்பார்கள். 30 நாட்களுக்குப் பிறகு நோன்பு முடிந்து ரம்ஜான் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை போற்றும் வகையில், கோவையில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியான உக்கடம், கோட்டைமேடு, கரும்புக்கடை, குனியமுத்தூர் ஆகிய பகுதியில் இஸ்லாமியர்கள் புத்தாடைகள் வாங்குவதற்காக குவிந்துள்ளனர்.
அதேபோல், புத்தாடை வாங்கும் ஜவுளிக் கடைகளில் குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது.
புத்தாடைகள் வாங்கும் போது, பெற்றோர்கள் விளையாட்டு உபகரணங்களில் தங்கள் குழந்தைகளை விளையாட வைத்து மகிழ்வித்தனர்.