நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி சிறு தானியங்களில் இந்தியா வரைபடத்தை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நவதானியத்தில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில், சிறுதானியங்களில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஏப்ரல்.8) நடைபெற்றது. அதில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி சிறு தானியங்களில் இந்தியா வரைபடத்தை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில், சிறுதானியங்களில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஏப்ரல்.8) நடைபெற்றது. அதில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி சிறு தானியங்களில் இந்தியா வரைபடத்தை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.