கோவை சின்னியம்பாளையம் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் தங்க வைர நகைகள் கொள்ளை...!

கோவை சின்னியம்பாளையம் தொட்டிபாளையத்தில், பூட்டி இருந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டில், 58 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து பிளம்பர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 58 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சின்னியம்பாளையம் தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி. ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் காங்கயத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று விட்டு, அன்று இரவு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர், உடனே உள்ளே சென்று பார்த்தபோது உடைமைகள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளது.

பீரோவை சோதனை செய்து பார்த்த போது, அதில் வைக்கப்பட்டிருந்த 58 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 30 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து குமாரசாமி, பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், கைரேகை நிபுணர்களுடன் சென்று சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். வீட்டு கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த 2 கைரேகை பதிவுகளை சேகரித்தனர். மேலும் அங்கு இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள், நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...