10 ஆம் தேதி பிரதமர் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்க தடை - காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிவிப்பு.

வருகிற 9, 10 தேதிகளில், மேட்டுப்பாளையம், தென் திருப்பதி நால்ரோடு, சுற்றி 5 கி. மீ. தொலைவிற்கு மற்றும் பிரதமர் வரவிருக்கும் வழித்தடத்தில், எவ்வித டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வரவுள்ள பிரதமர் மோடி, வரும் 10 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதையடுத்து, கோவை, நீலகிரி பாராளுமன்ற தொகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இன்று (ஏப்ரல்.8) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதமர் மோடி, வருகின்ற 10. 04. 2024 தேதி புதன்கிழமையன்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் உட்கோட்டம், காரமடை காவல் நிலைய பகுதியில் உள்ள தென் திருப்பதி நால் ரோடு சந்திப்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தர உள்ளார்.

பிரதமரின் வருகையையொட்டி, பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பொது கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து 5 கி. மீ. சுற்றளவிற்கு பிரிவு 24 (ii) of Drones Rules 2021- ன் படி 09. 04. 2024 மற்றும் 10. 04. 2024 ஆகிய இரு தினங்களுக்கு தற்காலிக சிவப்பு மண்டலமாக அறிவித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அதில், பொது கூட்டம் நடக்கும் இடமான கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் உட்கோட்டம், தென் திருப்பதி நால்ரோடு அதனை சுற்றி 5 கி. மீ. தொலைவிற்கு (வான் வழியாக) மற்றும் அவர்கள் வரவிருக்கும் வழித்தடத்தில், வருகிற 09. 04. 2024 மற்றும் 10. 04. 2024 ஆகிய இரு தினங்களுக்கு எவ்வித டிரோன்கள் (Drones) மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Unmanned Aircraft System Flights) பறக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...