திமுகவை சேர்ந்த பெண்களுக்கு தான் ஆயிரம் ரூபாய் செல்கிறது - திருப்பூரில் ஜி.கே.வாசன் பேச்சு

திருப்பூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மக்களுடைய பிரச்சினைகளை இதுவரை சரியாக பிரதிபலிக்கவில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் முருகானந்தனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் திருப்பூரில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசியவர், தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறையினர் நிறைந்த திருப்பூரில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளது. திருப்பூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மக்களுடைய பிரச்சினைகளை இதுவரை சரியாக பிரதிபலிக்கவில்லை. மக்களை சந்திக்கவே இல்லை. எனவே நல்லவர்களை அடையாளம் கண்டு வாக்களிப்பதோடு அவர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பத்து வருட கால பிரதமர் மோடியின் ஆட்சியில் மக்களின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

பிரதமரின் இந்த சாதனைகளே வருங்கால பாராளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு அடித்தளம். 100% திட்டங்களை திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு கொண்டு வந்து திருப்பூர் தொகுதியை நம்பர் ஒன் தொகுதியாக மாற்றுவதற்கு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும். மக்கள் விரோத திமுக அரசின் பொய் பிரச்சாரத்தை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்.தொடர்ந்து பொய் பிரச்சாரங்களை கூறிக்கொண்டு மக்களை அலைக்கழித்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே இந்த தேர்தலில் உங்கள் வாக்கின் மூலம் உங்களை ஏமாற்றியவர்களை ஏமாளியாக வேண்டும் என்றும் கூறியவர். மத்திய அரசின் மகளிர் திட்டங்களை நரேந்திர மோடி அரசில் மட்டும்தான் இந்தியாவில் உள்ள பெண்களுக்கு அதிக திட்டங்களை கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். திமுக அரசை பொறுத்தவரை திமுகவை சேர்ந்த பெண்களுக்கு தான் ஆயிரம் ரூபாய் செல்வதாக குற்றம்சாட்டினார்.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...