கோவை மேட்டுப்பாளையத்தில் பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கோவை விமான நிலையத்திற்கு நாளை மதியம் 1:50க்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்து பேச உள்ளார்.


கோவை: பா.ஜ.க.வின் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாமலை மற்றும் நீலகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் L. முருகன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கவும் மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசவும் நாளை பிரதமர் கோவை வருகிறார்.

இந்த நிகழ்ச்சி நாளை மதியம் 1 மணிக்கு மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதி பகுதியில் உள்ள நான்குரோடு சந்திப்பு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று ஏப்ரல்.9 இதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஹெலிகாப்டர் ஒத்திகைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்க அங்கு ஒரு ஹெலிபேட் உருவாக்கப்பட்டுள்ளது. முதலாவதாக கோவை விமான நிலையத்திற்கு மதியம் 1:50க்கு வரும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்து பேச உள்ளார். அதன் பின்னர் மதியம் 3.30 மணிக்கு திரும்பவும் ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து நாக்பூர் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...