உடுமலையில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா பூச்செரிதலுடன் தொடக்கம்

16-ம் தேதி கம்பம் போடுதல் நிகழ்வும்,19-ம் தேதி மதியம் 1 மணிக்கு தேவாங்கர் சமூக நல மன்றத்தின் சார்பில் கொடியேற்றமும், 2 மணிக்கு பூவோடும் ஆரம்பமாகிறது. 23-ம் தேதி இரவு 10 மணிக்கு பூவோடு நிறைவும், 24-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மாவிளக்கும், மதியம் 3 மணிக்கு மாரியம்மன் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையின் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நோன்பு சாட்டுதலுடன் தொடங்கி உள்ளது. முதல் நிகழ்வாக நேற்று மாலை 5 மணிக்கு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் இருந்து பூக்கூடைகள் மாரியம்மன் கோவிலுக்கு மங்கள வாத்தியம் இசைத்தவாறு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

அதைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள மாரியம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது. இதையடுத்து விநாயகர், அஷ்டதிக் நாகர்கள், அஷ்டதிக் தேவதைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக பத்திரிக்கை வாசிக்கப்பட்டு முரசு அடித்து நோன்பு சாட்டப்பட்டது. அப்போது ஊர் நலம் பெற, நாடு நலம் பெற அனைவரும் நோய் நொடியின்றி மாரியம்மன் அருள் பெற்று மகிழ்வுடன் வாழ 15 நாள் சாட்டாக நோன்பு சாட்டப்படுகிறது என்று கோவில் வளாகத்தில் மூன்று முறை முரசு அடித்து வலம் வந்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



அடுத்த விழாவாக 16-ம் தேதி கம்பம் போடுதல் நிகழ்வும்,19-ம் தேதி மதியம் 1 மணிக்கு தேவாங்கர் சமூக நல மன்றத்தின் சார்பில் கொடியேற்றமும், 2 மணிக்கு பூவோடு ஆரம்பமாகிறது. 23-ம் தேதி இரவு 10 மணிக்கு பூவோடு நிறைவும், 24-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மாவிளக்கும், மதியம் 3 மணிக்கு மாரியம்மன் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை மாலை 4.15 மணிக்கு தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்சவம், நவத்துர்கா பூஜை, பரிவேட்டையும் குட்டை திடலில் வாண வேடிக்கையும், 27-ம் தேதி கொடி இறக்கம்,மகா அபிஷேகம், மஞ்சள் நீராட்டு, புஷ்ப பல்லக்குடன் விழா நிறைவு பெறுகிறது.

விழாவையொட்டி மாரியம்மன் நாள்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் உடுமலை நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ். ஸ்ரீதர், கோவில் செயல் அலுவலர் சி.தீபா உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...