சிசு பராமரிப்பு குவிஸ் போட்டியில் கேஎம்சிஎச் குழு தேசிய சாம்பியன்

தேசிய சிசு மன்றம் சார்பில் இந்துாரில் நடந்த தேசிய கருத்தரங்கில், நடந்த வினாடி வினா போட்டியில் கேஎம்சிஎச் மருத்துவர்கள் வி.பவித்ரா, என்.பிரதீபா குழுவினர் சாம்பியன் வெற்றி பெற்றனர்.

பிறந்த சிசுக்களை கவனிப்பதில் செவிலியர்களின் பங்கு மகத்தானது. உலகெங்கிலும் சிசு தீவிர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றும் செவிலியர்கள் கவனிப்பு தான் மிக மிக முக்கியமானது. மிகவும் உயர்தரமான கவனிப்பு என்பது குழந்தையின் நலன் பற்றி அறிய நன்குபடித்த செவிலியரால் மட்டுமே முடியும்.

சிசு பராமரிப்பு, மருத்துவம் பற்றி செவிலியர்களின் திறனை பரிசோதிக்க தேசிய அளவல் ஒரு வினாடி வினா நிகழ்ச்சி இந்துாரில் நடைபெற்றது. இதில், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை, தரமான சிசு பராமரிப்பு தரும் மருத்துவமனைகளுள் ஒன்று என நிருபித்துள்ளது.



சிசு பராமரிப்பில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் ஏ.ஆர்.சீனிவாசன், மருத்துவர் ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து வகுப்புகளை நடத்தி, இத்தகைய வெற்றி பெற செவிலியருக்குகற்றுக் கொடுத்துள்ளனர்.

தேசிய சிசு பராமரிப்பு மன்றம் ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய அளவில் சிசு பராமரிப்பு பற்றிய குவிஸ் போட்டியை நடத்தி வருகிறது. சிசு பராமரிப்பில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள் இப்போட்டியில் பங்கேற்று தங்களது அறிவுத்திறனை மேம்படுத்தி வருகின்றனர். இது பல்வேறு கட்ட போட்டிகளாக நடத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்ட போட்டிகள் கோவையிலும், மண்டல அளவிலான போட்டிகள் சென்னையிலும் நடந்தன. இதில், வி.பவித்ரா மற்றும் என்.பிரதிபா ஆகியோர் போட்டியில் பங்கேற்றதோடு, இந்துாரில் நடந்த தேசிய அளவிலான சிசு பராமரிப்பு கருத்தரங்கையொட்டி நடந்த தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றுள்ளனர்.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருகிறது. சென்ற ஆண்டும் இறுதிப்போட்டியில் 3-வது பரிசை வென்றது. இந்த ஆண்டு முதல் பரிசை பெற்று, தேசிய அளவில் சாம்பியன் பட்டத்தை பெற்று தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...