சென்னையில் இருந்து கோவை வழியாக கொச்சுவேலிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 10, 17, 24ம் தேதிகளில் மாலை 3.45க்கு புறப்படும் சிறப்பு (06043) ரயிலானது முறையே மறுநாள் காலை 8.45க்கு கேரளா மாநிலம் கொச்சுவேலி ரயில் நிலையத்திற்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று (ஏப்ரல்.10) வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, சேலம், கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 10, 17, 24ம் தேதிகளில் மாலை 3.45க்கு புறப்படும் சிறப்பு (06043) ரயிலானது முறையே மறுநாள் காலை 8.45க்கு கேரளா மாநிலம் கொச்சுவேலி ரயில் நிலையத்திற்கு சென்றடையும்.

மறு மார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து ஏப்ரல் 11, 18, 25ம் தேதிகளில் மாலை 6.25க்கு (06044)புறப்பட்டு, முறையே மறுநாள் காலை 10.40க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

இந்த ரயிலில் 14 மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...