தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை - பொள்ளாச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை

அதிமுகவை உடைக்க நினைத்த மு.க.ஸ்டாலின் கனவு உடைக்கப்பட்டது. தேர்தல் என்ற போரில் எதிரிகளை விரட்டி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கார்த்திகேயனை ஆதரித்து இன்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் பகுதியில் உள்ள மார்க்கெட் ரோட்டில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.



அப்போது பேசிய அவர், அதிமுகவை உடைக்க நினைத்த மு.க.ஸ்டாலின் கனவு உடைக்கப்பட்டது. தேர்தல் என்ற போரில் எதிரிகளை விரட்டி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும். கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுக தொண்டர்கள் நிறைந்த கட்சி இது யாராலும் எதுவும் செய்ய முடியாது.



ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு கேரளா இரு மாநில அரசுகள் பேசி தீர்க்கும் திட்டம். இது எப்படி மத்திய அரசு தலையிட முடியும். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை. அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை ஒரே மேடையில் நின்று மு.க.ஸ்டாலின் பேச தயாரா என்று தேர்தல் பரப்பரை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். பேட்டி கொடுத்து மக்களை ஈர்த்து வாக்குளை பெற முயற்சி செய்வதாக அண்ணாமலை மீது அவர் மறைமுகமாக சாடினார்.



இந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன், உடுமலை ராதாகிருஷ்ணன், அமுல் கந்தசாமி, மகேந்திரன் மற்றும் பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...