அரிசிக்கு ஜிஎஸ்டி போட்டவர் மோடி அதற்கு உறுதுணையாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி - வெள்ளகோவிலில் திமுக வேட்பாளர் பிரகாஷ் புகார்

எதிரியாக இருக்கலாம், ஆனால் துரோகியாக இருக்கக் கூடாது. தற்போது அதிமுகவில் இருப்பவர்கள் அனைவரும் துரோகிகள் என்று ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் விமர்சனம் செய்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட அறிவொளி நகர் பகுதியில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் வெள்ளகோவில் நகர திமுக செயலாளர் சபரி முருகானந்தம் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இதில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் கூறுகையில், அரிசிக்கு ஜிஎஸ்டி வரி போட்டவர் மோடி. அதற்கு உறுதுணையாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. ஜெயலலிதா இருக்கும்போது கையெழுத்து போட முடியாது என மறுத்துவிட்டார். மோடியா லேடியா உன்னை ஒரு கை பார்க்கிறேன் என கூறியதாக தெரிவித்தார்.

ஜெயலலிதா இறந்தவுடன் எடப்பாடி பழனிச்சாமி அனைத்திற்கும் கையெழுத்து போட்டு விட்டார். எதிரியாக இருக்கலாம் துரோகியாக இருக்கக் கூடாது. தற்போது அதிமுகவில் இருப்பவர்கள் அனைவரும் துரோகிகள். மேலும் அறிவொளி நகர் பகுதியில் பேருந்து நிற்காமல் செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். அதற்கு ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் நீங்கள் அதிமுக கவுன்சிலரை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அது நான் தவறு என சொல்லவில்லை அவர் சொன்னால்தான் நிறுத்துவார்கள். இல்லையென்றால் நீங்கள் ஒன்றிணைந்து மனுவாக எழுதி எங்களது மாவட்டச் செயலாளரிடம் கொடுங்கள் பேருந்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...