எர்ணாகுளம்-டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் இடையே கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

எர்ணாகுளம் - டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 19, 26, மே 3, 10, 17, 24, 31ம் தேதிகளில் மாலை 7.10க்கு புறப்பட்டு மூன்றாம் நாள் இரவு 7 மணிக்கு டெல்லி சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது.


கோவை: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று (ஏப்ரல்.11) வெளியிட்டுள்ள அறிக்கையில், எர்ணாகுளம்-டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் இடையே கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருப்பதி வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

அதன்படி வண்டி எண் 06071 எர்ணாகுளம் - டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 19, 26, மே 3, 10, 17, 24, 31ம் தேதிகளில் மாலை 7.10க்கு புறப்பட்டு மூன்றாம் நாள் இரவு 7 மணிக்கு டெல்லி சென்றடையும். மறு மார்க்கத்தில் வண்டி எண் 06072 ஹஜ்ரத் நிஜாமுதீன் - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 22, 29, மே 6, 13, 20, 27 மற்றும் ஜூன் 3ம் தேதிகளில் அதிகாலை 5.10க்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு முன்றாம் நாள் அதிகாலை 3.10க்கு எர்ணாகுளம் வந்து சேரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...