ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை மத்திய அரசால் மட்டுமே செயல்படுத்த முடியும் - பொள்ளாச்சியில் பாஜக வேட்பாளர் வசந்தராஜன் பேட்டி

500 ஆண்டுகால கோரிக்கையான ராமர் கோயில் கட்டியது போல், 50 ஆண்டு கால கோரிக்கையான ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை மத்திய அரசு மட்டுமே செயல்படுத்த முடியும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் இன்று பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட எரிசனம்பட்டி, தேவனூர்புதூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.



பின்னர் பேசிய அவர், பொள்ளாச்சியில் நேற்று தேர்தல் பரப்புரைக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை தமிழ்நாடு,கேரளா இரு மாநில அரசுகள் பேசி தான் நிறைவேற்ற முடியும் ஆனால் மத்திய அரசு எதையும் செய்ய முடியாது என்று பேசினார். ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களிடையே பேசிய பாஜக வேட்பாளார் வசந்தராஜன்., 500 ஆண்டுகால கோரிக்கையான ராமர் கோயில் கட்டியது போல் 50 ஆண்டு கால கோரிக்கையான ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை மத்திய அரசு மட்டுமே செயல்படுத்த முடியும். அதிமுக ஆட்சியில் ஏன் செயல்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் கடந்த ஐந்தாண்டுகளாக ஊழல் செய்து வரும் திமுக மற்றும் அதிமுகவை விரட்டியடிக்க வேண்டும் என்றும் வாக்கு சேகரிக்கும் போது பேசினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...