ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை மத்திய அரசால் மட்டுமே செயல்படுத்த முடியும் - பொள்ளாச்சியில் பாஜக வேட்பாளர் வசந்தராஜன் பேட்டி

500 ஆண்டுகால கோரிக்கையான ராமர் கோயில் கட்டியது போல், 50 ஆண்டு கால கோரிக்கையான ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை மத்திய அரசு மட்டுமே செயல்படுத்த முடியும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் இன்று பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட எரிசனம்பட்டி, தேவனூர்புதூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.



பின்னர் பேசிய அவர், பொள்ளாச்சியில் நேற்று தேர்தல் பரப்புரைக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை தமிழ்நாடு,கேரளா இரு மாநில அரசுகள் பேசி தான் நிறைவேற்ற முடியும் ஆனால் மத்திய அரசு எதையும் செய்ய முடியாது என்று பேசினார். ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களிடையே பேசிய பாஜக வேட்பாளார் வசந்தராஜன்., 500 ஆண்டுகால கோரிக்கையான ராமர் கோயில் கட்டியது போல் 50 ஆண்டு கால கோரிக்கையான ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை மத்திய அரசு மட்டுமே செயல்படுத்த முடியும். அதிமுக ஆட்சியில் ஏன் செயல்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் கடந்த ஐந்தாண்டுகளாக ஊழல் செய்து வரும் திமுக மற்றும் அதிமுகவை விரட்டியடிக்க வேண்டும் என்றும் வாக்கு சேகரிக்கும் போது பேசினார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...