காங்கேயத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து பொள்ளாச்சி ஜெயராமன் வாக்கு சேகரிப்பு

என்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் செய்து தருவேன் என அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்குறுதியளித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட துர்க்கை அம்மன் கோவில், அய்யாசாமி நகர், மூர்த்திரெட்டி பாளையம், தட்டான் தோட்டம், களிமேடு, செம்மங்காலிபாளையம் ஆகிய பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் வாக்கு சேகரித்தார்.



நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமையில், என்.எஸ்.என்.நடராஜ் முன்னிலையில் நகர பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது பேசிய நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேசுகையில், என்னை நாடாளுமன்ற உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் செய்து தருவேன் எனவும் கூறினார். உங்களுக்காக இன்னும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவதற்காக காத்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார். இதில், மாவட்ட பொருளாளர் கிஷோர் குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...